தொகுப்பு

Archive for the ‘நகைச்சுவை’ Category

நான் சூர்யா மாதிரி இருந்தா…

பையன்: நான் உன்னைக் காதலிக்கிறேன்.

பெண்: நான் சூர்யா மாதிரி பையனத் தான் காதலிப்பன்.

பையன்: நான் சூர்யா மாதிரி இருந்தா உன்னை ஏன் காதலிக்கப் போறன்!!!!!!!!

 


 

Categories: ALL POSTS, சினிமா, நகைச்சுவை குறிச்சொற்கள்:

உங்க நாக்கால உங்க எல்லா பல்லையும் தொட முடியுமா?

வாழ்க்கையில் சில விஷயங்கள் எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் நம்மால் செய்ய முடியாது.

No.1 உங்க நாக்கால உங்க எல்லா பல்லையும் தொட முடியாது.

 

இத வாசித்த உடனே எல்லா  லூசும் முயற்சி பண்ணி பார்க்கும்.

பிறகு சின்னபுள்ளதனமா சிரிக்கும்.!

அப்புறம் என்ன வழக்கம் போல எல்லோருக்கும் இந்த குறுஞ்செய்தியை திருப்பி அனுப்பும்.

ஹையோ..ஹையோ..

(இது ஒரு நகைச்சுவை பதிவு.)

மனைவியின் சந்தேகமும் கணவனின் தெளிவான பதிலும்

மனைவி :- என்னங்க! சொர்க்கத்தில கணவன் & மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே.???

கணவன் :- அதனால தான்டி அது சொர்க்கம்..!

Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:,

SMSக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா?

S- சிங்கம் அனுப்ப

M- மங்கி  படிக்கும்

S- சிமோள் ஸ்டோரி

என்ன முறைப்பு!நான் சிங்கம்.நீங்கள் மங்கி.யாருக்காவது அனுப்பி நீங்களும் சிங்கமாயிடுங்க. —————————————————————————————————————————————–

குறிப்பு:  SMS என்பதன்  உண்மையான தமிழ் அர்த்தம் குறுஞ்செய்தி
அல்லது குறுந்தகவல்.

=============================================================================

 உபரித் தகவல்- இது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வெள்ளைச் சிங்கம்.
Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” இதன் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்.நீங்கள் நினைப்பீர்கள் அயல் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உங்கள் பிள்ளை தானாக வளரும் என்று.அது தான் தவறு.
இதன் அர்த்தம் என்னவென்றால் “உங்கள் மனைவியை ஊட்டி வளர்த்தால் உங்கள் மனைவியின் வயிற்றில் வளரும் உங்களது பிள்ளை தானாக வளரும்” என்பதாகும்.உங்கள் மனைவி ஊரான் பிள்ளை அல்லவா!

 

நகைச் சுவையாக எடுத்துக்கொள்ளவும்.

 

Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

வடிவேலுவை கண்டுபிடித்துக் கொடுத்தால் 5 கோடி ரொக்கப் பரிசு

மேலே உள்ள படத்தில் இருக்கும் நபரை கடந்த 13ம் திகதி முதல் காணவில்லை. தயவு செய்து அவரை கண்டு பிடித்து தரும் படி பொது மக்களை தேதிமுக கட்சி கோருகின்றது.அவ்வாறு கண்டு பிடித்து தருபவர்களுக்கு 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

கீழே அவரின் விபரங்கள் தரப்படுகின்றது.

பெயர் – வடிவேலு

வயது  -    40-45

நிறம்  -  கறுப்பு

சொந்த இடம் – மதுரை

  -மேலதிக  அடையாளங்கள் -

*ஒட்டு மீசை வைத்திருப்பார்.

*கறுப்பு கண்ணாடி அணிவார்.

*உணவகங்களில் இலவசமாக சாப்பிட படாத பாடு படுவார்.

இவரை கண்டு பிடித்தால் அறிவிக்க வேண்டிய அல்லது ஒப்படைக்க வேண்டிய முகவரி .

தேதிமுக கட்சி
தலைமையகம்
சென்னை
தமிழ்நாடு

அறிவிக்க வேண்டிய கைபேசி எண் : (91) 97456 53246

                                         தொலைபேசி எண் : (91) 97356 76436

மேலதிக விபரங்களை பார்வையிட கீழே உள்ள இணைய தள முகவரியை சொடுக்கவும்.

www.தேதிமுக.com

முக்கிய குறிப்பு: இவரை இரவு நேரத்தில் தயவு செய்து தேட வேண்டாம்.

இப்படிக்கு இவரைத்தேடும் ஆருயிர் (குடி)மகன் விஜயகாந்த்.

—–யாவும் நகைச்சுவை—–

வடிவேலு இனி என்ன பஞ்ச் வசனங்கள் பேசுவார்?

 வடிவேலு திமுகவுக்கு பாரிய ஆதரவை தமிழகத் தேர்தலில் அளித்தார்.அனல் பறக்கும் பிரசாரங்களை மேற்கொண்டார். தேமுதிக வை தீவிரமாக எதிர்த்தார்.ஆனால் தேர்தல்  முடிவுகள் திமுக வுக்கு பாரிய தோல்வியை ஏற்படுத்தியது.

இனி வடிவேலுவிடம்   தேர்தல் முடிவுகள் குறித்துக் கேட்டால் என்ன பஞ்ச் வசனங்கள் பேசுவார் என்பதை நகைச்சுவையாகத் தருகின்றேன்.

1. ஹய்யோ! ஹய்யோ! எல்லாரும் நான் சொன்னதை நம்பிட்டீங்களா?

2. ஐயா! நான் ஒரு காமெடி பீஸ்ஸங்க.

3. இப்பவே கண்ணக் கட்டுதே!

4. ஏண்டா!இன்னமுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டிருக்கு.

5. என்ன! சின்னப் புள்ளத் தனமா இருக்கு.

6. இந்த எல்லையைத்  தாண்டி நீயும் வரக்கூடாது.நானும் வர மாட்டன்.

7. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.

8. வடை போச்சே!

9. அழுதிடுவன்..அழுதிடுவன்.

10. வேணாம்.. வேணாம்.

11. இது தெரியாமப் போச்சே!

12. மாப்பு…வச்சிட்டாங்கையா  ஆப்பு.

13. சல்லடை சில்லடை ஆக்கிட்டாங்கையா.

14. ஏன். நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு.

15. உசுப்பேத்தி உசுப்பேத்தி இப்படி ரண கள மாக்கிடாங்களே.

16. ஐயோ..எல்லாம் போச்சே.

17. நாம தான் கொஞ்சம் டீப்பா இறங்கிட்டமோ.

Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

உலகின் பொருளாதார வீழ்ச்சியை விளக்கும் ஒரு படம்

பூனை நன்றாகவே உலகின் பொருளாதார வீழ்ச்சியை காட்டுகின்றது.

சம்பள தினத்தில் கணவனும் மனைவியும்

மனைவி: எங்கே உங்களுடைய சம்பளம் ??

மனைவி:உங்களுடைய சட்டைப்பையை எனக்கு காட்டுங்க.

கணவன்:நான் தரமாட்டேன்……நீ என்னுடைய சம்பளப்பணம் முழுவதையும் செலவழித்து விடுவாய்….!!!!!!

மனைவி:அப்பாடா……   நான் சொப்பிங் போகப்போகிறேன்.

மனைவி:நன்றி என்னுடைய இனிய இதயமே….. bye:)


Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

இது எப்படி?

இது யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல!

நகைச்சுவைக்காக மட்டுமே!!


Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers