தொகுப்பு

Archive for the ‘கவிதை’ Category

நீ இருப்பது தெரியவில்லை

தேவலோகத்தில் சுயம்வரம்
அரசன் முன்னிலையில்
தேவலோக அழகிகள்!
வரிசையிலே
பார்வையாளராய்
நீ!
பாவம் அரசன்
நீ இருப்பது தெரியவில்லை
அவனுக்கு!

Categories: ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

விரைவில் தொடங்கு

எனக்கெதிராக
போரைத்
தொடங்கப்
போகிறாயாம்!
விரைவில்
தொடங்கு
எதிர்ப்பில்லாமல்
வென்று விடலாம்!

Categories: ALL POSTS, கவிதை

உன்னைக்கண்டால்

கடவுள் சொன்னான்
மனிதன் பாவமென்று!
உன்னைக்கண்டால்
கடவுளும் பாவம் தான்!!

Categories: ALL POSTS, கவிதை

உனது முடிவு

என் காதலுக்கு
அணிந்துரை எழுதிய
இறைவன்
முடிவுரை
தெரியாமல்
தடுமாறுகின்றான்
உனது முடிவு
எப்படி அமையுமென்று
அவனுக்கே தெரியாததால்!

Categories: ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

ஒரு கல்லறை பேசுகின்றது

உன்னைப்
பார்த்தேன்
உன்னில்
கலந்தேன்
என் காதலை
விண்ணப்பித்தேன்
காதலில்
ஜெயித்தேன்
உன்னோடு
ஐக்கியமானேன்
இரண்டறக்
கலந்தேன்
உன்னாலே
பிரிந்தேன்
உள்ளத்தால்
தவித்தேன்
முடிவற்றுக்
கிடந்தேன்
காதலில்
தோற்றேன்
வலியால்
துடித்தேன்
மாற்றான் மனைவியாக
கண்டேன்
இரண்டாக
உடைந்தேன்
என் காதலுக்கு
விடை தேடினேன்
எனக்கு முடிவுரை
எழுதினேன்
என்னை
அழித்தேன்
இறுதியில்
கல்லறையானேன்.

Categories: ALL POSTS, கவிதை

உன் பிறந்த நாள்

நாளை உன்
பிறந்த நாள்!
என்னை அழிக்க
கடவுள் உன்னை
பூமிக்கு
அனுப்பிய நாள்!!

Categories: ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

அழகிய நிலா!

என் நண்பனின்
கனவில்
வந்தது அழகிய நிலா!
நிலாவுக்குத்தெரியவில்லை
என் நண்பன்
சூரியன் என்று!!

Categories: ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

நாங்களும் சீக்கிரம் வருவோம்!

மடிந்து போன
உறவுகளுக்கு
ஒரு ஆறுதல்!
நாங்களும்
சீக்கிரம்
வருவோம்!!

Categories: ALL POSTS, கவிதை

செவ்வாயில் ஆராய்ச்சி

செவ்வாய் பெண்

செவ்வாயில்
ஆராய்ச்சி
நீ அங்கிருந்து தான்
வந்தாய் என்ற
சந்தேகமாம்
விஞ்ஞானிகளுக்கு!

Categories: ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:,

என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே

crying-girl

கனவுகள் சுமந்து பறந்த பட்டாம்பூச்சி ஒன்று தன் சிறகுகளை இழந்து மெளனமாய் இன்று மனசுக்குள் அழுவது என் செவியில் விழுகிறதே…….. !!! என் உயிரெல்லாம் பூக்கள் மலர கவிதைகள் எழுதிய ஜீவன் இன்று ஜன்னல் வழியே தூரத்து வானின் வெள்ளி நிலவிடம் பேசி மறுமொழி பேச ஆளில்லாமல் தனித்து துடிக்கிறதே….. !! உன் இதயத்தின் விசும்பல்கள் என் இதயம் அறியும்….! என் இதயத்தின் தவிப்புகளை உன் இதயம் அறியும்….! என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers