தொகுப்பு

Archive for the ‘இசை’ Category

ஹாலிவுட்டில் ஜாக்சன் உடல் அடக்கம்!

michael-jackson

ஹாலிவுட் ஹில்ஸ் கல்லறை வளாகத்திலேயே மைக்கேல் ஜாக்சனின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒருமனதாக தீர்மானித்துள்ளனராம். ஜாக்சன் இறந்து கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் அவரது உடல் நிரந்தரமாக அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. தற்காலிக கல்லறையில்தான் அவரது உடலை வைத்துள்ளனர்.

ஜாக்சன் உடலை அடக்கம் செய்யும் இடத்தை முடிவு செய்வதில் அவரது குடும்பத்தினரிடையே இரு வேறு கருத்துக்கள் இருந்தன.

அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை இல்ல வளாகத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதற்கு ஜாக்சனின் தாயார் காத்தரீன் ஒத்துக் கொள்ளவில்லை.

2005ம் ஆண்டு சிறார்களுடன் பாலியல் தொடர்புகளை வைத்துக் கொண்டதாக ஜாக்சன் மீது பெரும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நெவர்லேன்ட் இல்லத்தை விட்டு விலகியிருந்தார் ஜாக்சன். அந்த இல்லத்திற்குப் போகவே அவர் விரும்பாமல் இருந்தார். எனவே அந்த இடத்தி்ல ஜாக்சனை அடக்கம் செய்யக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதனால் குடும்பத்தினரிடையே இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது காத்தரீன் கருத்தை ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு குடும்பத்தினர் வந்துள்ளனர்.

இதையடுத்து ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள பாரஸ்ட் லான் நினைவுப் பூங்கா என்ற கல்லறை வளாகத்தில் ஜாக்சனின் உடலை நிரந்தரமாக அடக்கம் செய்யவுள்ளனர்.

இங்கு உடலை அடக்கம் செய்வது தொடர்பான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு விட்டதாம். இதையடுத்து ஜாக்சனின் உடலை இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பாரஸ்ட் லான் கல்லறை நிர்வாகம் இறங்கியுள்ளது.

பாரஸ்ட் லான் பகுதியில்தான் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஜாக்சனின் பாட்டியைக் கூட 1990ம் ஆண்டு இங்குதான் அடக்கம் செய்தனர்.

இதற்கிடையே, ஜாக்சனின் உடலில் 3வது முறையாக பிரேதப் பரிசோதனை செய்ய முடியுமா என்று அவரது தாயார் காத்தரீன், லாஸ் ஏஞ்சலெஸ் துணை மருத்துவ அதிகாரி டாக்டர் பால் லினெக்கியிடம் கோரினாராம்.

ஆனால், ஏற்கனவே 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால், அவரது உடல் கிட்டத்தட்ட குத்திக் குதறப்பட்டதைப் போலாகி விட்டது. அவரது உடல் உறுப்புகள் கிட்டத்தட்ட கலந்து போய் விட்டன. எது எது எந்தப் பகுதி என்று தெரியாத அளவுக்கு சதைக் கோளங்கள் கலந்து போய் விட்டன. எனவே 3வது பிரேதப் பரிசோதனைக்கு வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம் லினெக்கி.

இதுகுறித்து லினெக்கி கூறுகையில், கிட்டத்தட்ட ஜாக்சனின் உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்து விட்டார்கள். 2 முறை பிரேதப் பரிசோதனை செய்ததால் உடல் உறுப்புகள் சிதிலமடைந்து போய் விட்டன. இன்னொரு சோதனைக்கு ஏற்ற நிலையில் உடல் இல்லை என்றார்.

நெவர்லேன்ட் இடம் மாறுகிறது.

இதற்கிடையே, ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை வீட்டை அப்படியே இடம் மாற்றி லாஸ் வேகாஸுக்குக் கொண்டு போகப் போகிறார்களாம்.

நெவர்லேன்ட் வீட்டில் உள்ள அசையும் பொருட்களை பெயர்த்தெடுத்து அதை லாஸ் வேகாஸ் கொண்டு சென்று அங்கு அதை பொருத்தி, பிரமாண்ட சுற்றுலாத் தலம் போல அமைக்கவுள்ளனராம்.

Categories: ALL POSTS, இசை, உலகம் குறிச்சொற்கள்:

எனது மகன் தமிழிலும் பாடுவார்… -ஏ.ஆர்.ரஹ்மான்

rahmanசரிமக இசை நிறுவனம் சன் டிவியில் நடத்திய ஊ…லலல்லா என்ற நிகழ்ச்சி இசையே சுவாசம் என்று வாழும் இளைஞர்களை சுண்டி இழுத்தது.ரஹ்மானின் மேற்பார்வையில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான இசை ஆர்வலர்கள் குழு குழுவாக கலந்து கொண்டார்கள். பதினான்கு நகரங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழில் ஆறு குழுக்களும், தெலுங்கில் மூன்று குழுக்களும் வெற்றி பெற்றன. இவர்களின் இசை தொகுப்பில் இருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து ஆல்பமாக வெளியிடுகிறது சரிகம நிறுவனம்.

ஆகஸ்ட் 7- ந்தேதி இந்த ஆடியோ வெளியிடப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 7 ரஹ்மான் தனது நிர்வாகத்தின் கீழ் கே.எம் என்ற இசைப்பள்ளியை திறந்த தினம். இதன் ஓராண்டு நிறைவு விழாவில்தான் இந்த இசை ஆல்பத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறது சரிகம. இது பற்றிய அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஹ்மான். இவருடன் ஸ்ருதி கமல், நடிகை ஆன்ட்ரியா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இசைப்புயலிடம், உங்கள் மகன் இந்தியில் பாடியிருக்கிறாராமே? அவரை தமிழில் பாட வைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. லேசாக சிரித்தபடி பதிலளித்த ரஹ்மான் அவரு இப்போ குழந்தை பருவத்தில் இருக்கார். மியூசிக்கெல்லாம் அவருக்கு தெரியாது. ஆனாலும், தமிழில் பாடுவார் என்றார். தனது இசை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை தான் இசையமைக்கும் படங்களில் பாட வைக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!

Radharavi

ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் ராதாரவி.

‘மண்டபம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார்.

ar-rahman2009-oscars

விழாவில், ராதாரவி பேசியதாவது:

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை தரவேண்டும். இந்தி படங்கள் வருகிறது என்று, தமிழ் படம் திரையிடுவதை தவிர்க்கக் கூடாது.

தமிழ் படங்களை திரையிடாத தியேட்டர்களை இழுத்து மூடவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மனமில்லாவிட்டால் அவற்றை குடோன்களாக ஆக்கிவிடுங்கள். வேறு எங்காவது போய் தியேட்டர் கட்டிக் கொள்ளுங்கள்.

சின்ன படங்களை திரையிடுவதற்கு பல தியேட்டர்கள் முன் வருவதில்லை. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில சட்ட திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

தமிழ் பெயர்கள்

சில நடிகர்-நடிகைகள், அம்மா, அப்பா சூட்டிய பெயர்களை மாற்றிவிட்டு, ‘நியூமராலஜி’படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தாய், தந்தையைவிட ‘நியூமராலஜி’ எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. இது ‘சோளி உருட்டுவதை நம்பி அரசியல் நடத்துவது’ போல் உள்ளது.

இப்போதெல்லாம் சில இசை அமைப்பாளர்கள் ‘டியூன்’ போடுவதற்காக வெளிநாடுகளுக்கு போகிறார்கள். கூடுவாஞ்சேரியிலும், மதுரையிலும் கிடைக்காத ‘டியூன்’களா வெளிநாடுகளில் கிடைக்கப் போகிறது. இதுபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் சினிமாவை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு கண்டனம்

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்துதான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பட உலகை அடியோடு புறக்கணிக்கிறார்.

அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார்.

இத்தனையையும் தாண்டி தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் கண்டுகொள்வதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றார்.

Categories: ALL POSTS, இசை குறிச்சொற்கள்:,

இளையராஜாவுக்கு கசந்துப்போன கவிஞர்கள்

ilaiyaraja_vairamuthu

ஒரு மாமாங்கத்துக்கு மேலாகிறது இளையராஜாவும் – வைரமுத்துவும் ‘டூ’விட்டு. ராஜாவும் – முத்துவும் இணைந்து பிறந்த பாடல்கள் ஒவ்வொன்றும் கற்கண்டு.
கருத்து மோதல் இருவரையும் எட்டி உதைக்க, வெவ்வேறு திசையில் பிரிந்துபோனார்கள். இப்போதுகூட இருவரையும் சேர்க்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. எனினும் அவரவர்களின் நிலை, நகர்த்தமுடியாத சிலையாகவே நீடிக்கிறது. இது உலகமறிந்த விஷயம்தான். ஆனால் இளையராஜா இப்போது எடுத்திருக்கும் முடிவுதான், ஒட்டுமொத்த கவிஞர்கள் மீது அவருக்கு கசப்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை வரவைக்கிறது.

வைரமுத்து இல்லாவிட்டாலும் மு.மேத்தா, பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், சினேகன் என இளம் கவிஞர்களைக்கூட தன் மெட்டுக்கு எழுதச்சொல்லி ஊக்குவித்தவர், திடீரென எழுத்தாளர்களை கவிஞர்கள் இடத்தில் பொருத்தியுள்ளார். நடிகர் ஆர்யா தயாரித்துவரும் ‘படித்துறை’ படத்தில் இசைஞானிதான் இசை. பாலாவின் உதவியாளர் சுகா இயக்குகிறார்.

படத்தில் பாட்டெழுத யாரையெல்லாம் போடலாம் என இயக்குனர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, இளையராஜா சொன்ன லிஸ்ட் கேட்டு ஷாக்காகிவிட்டார் இயக்குனர். எழுத்துலகில் ஜாம்பவான்களாக விளங்கும் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரை பாட்டெழுத வைத்துள்ளாராம் ராஜா. இந்த மூவருமே இதுவரை பாடல் எழுதியதில்லை. எழுத்தாளர்களை பாடலாசிரியராக்கிய இளையராஜாவின் முடிவுதான், கவிஞர்கள் மீது அவருக்கு கசப்புணர்வு ஏற்பட்டுவிட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

Categories: ALL POSTS, இசை குறிச்சொற்கள்:

மைக்கேல் ஜாக்சனின் 90 லட்சம் இசை ஆல்பம் விற்பனை

michael_album coverமைக்கேல்ஜாக்சனின் மரணத்துக்கு பிறகு அவருடைய இசை ஆல்பத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 90 லட்சம் ஆல்பங்கள் விற்பனையாகி உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 23 லட்சம் ஆல்பம் விற்றுள்ளது.

ஜாக்சன் ஆல்பம் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. ஆல்பம் விற்பனை அதிகரித்து இருப்பதால் ஏராளமான ஆல்பத்தை தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Categories: ALL POSTS, இசை, உலகம் குறிச்சொற்கள்:,

மைக்கேல் ஜாக்சன் இன்னும் சாகவில்லை!!

michael-jackson_

மைக்கேல் ஜாக்சன் இன்னும் சாகவில்லை. அவர் டிராமா போடுகிறார். அட்டகாசமாக அவர் திரும்பி வருவார் என்று கூறும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில் ஜாக்சனின் ஆவியைப் பார்த்ததாக சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.

ஜாக்சனுக்குச் சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சனின் ஆவி நடமாடியதைப் பார்த்ததாக இவர்கள் கூறுகிறார்கள்.

இதையடுத்து அதுகுறித்த செய்திகளைப் பார்ப்பதற்காக இணையதளங்களை மொய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஜாக்சனின் பண்ணை வீட்டின் சுவரில் ஜாக்சனின் நிழல் உருவம் தென்பட்டு பின்னர் மறைந்து விட்டதாக இந்த ரசிகர்கள் சிஎன்என் தொலைக்காட்சியின் இன்சைட் நெவர்லன்ட் என்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.

அந்த நிழல் உருவம் சுவரில் தோன்றி பின்னர் பண்ணை வீட்டின் காரிடார் வழியாக நடந்து போனதாகவும். அதன் பின்னர் அது மறைந்து விட்டதாம்.

அது நிச்சயம் ஜாக்சனின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து, நான்தான் ஜாக்சன் என்று யாரும் சொல்லிக் கொண்டு கிளம்பாமல் இருந்தால் சரி.

மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார்

micheal

மைக்கேல் ஜாக்சன் எத்தனை பெரிய மனிதர் என்பதை இன்டெர்நெட் தெளிவாக‌வே புரிய வைத்துள்ளது. ஜாக்சன் மறைவை அடுத்து தேடல் உலகில் ஜாக்சன் தொடர்பான பத‌ங்களே அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றன. முதல் நாள் அன்று இது உச்சத்தில் இருந்தது.

இதன் காரணமாக இண்டெர்நெட் முடிங்கிப்போகும் நிலை உண்டானது.
தொடர்ந்து ஜாக்சனே அதிகம் தேடப்படும் பெயராக இருக்கிறார்.
அது மட்டும் அல்ல ஜாக்சனின் பாடல்களும் அதிக அளவில் டவுண்லோடு செய்யப்பட்டு கேட்கப்படுகின்றன.

ஜாக்சனுக்கு பெரும் புகழ் தேடித்தந்த திரில்லர் ஆல்பம் இது வரை 26 லட்சம் முறை டவுண்லோடு ஆகியிருக்கிறதாம்.

ஜாக்ச‌ன் நினைவாக‌ ப‌ல‌ இனைய‌த‌ள‌ங்க‌ளும் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

இந்த‌ ஜாக்சன் மோக‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு வைர‌ஸையும் க‌ட்ட‌விழ்த்துவிட்ட்டுள்ள‌ன‌ர். ஆம் ஜாக்ச‌னை நினைவு கூறுவோம் என‌ பொருள்ப‌ட‌ ஒரு இமெயில் உலா வ‌ருகிற‌தாம்.இந்த‌ மெயில் உண்மையில் ஒரு வைர‌ஸ். இத‌னை கிளிக் செய்தால் விப‌ரீத‌ம் ஏற்ப‌ட‌லாம்.

ஜாக்ச‌ன் மீதான‌ க‌வ‌ன‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு விஷ‌ம‌த்த‌ன‌ம் செய்யும் இந்த‌ வைர‌சிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌வும்.

மைக்கேல் ஜாக்சன் புகழ் சொல்லும் பாடல்

Michael Jackson – Billie Jean / Motown 25 ( Moonwalk )

 

Categories: ALL POSTS, இசை, உலகம் குறிச்சொற்கள்:

ஜாக்சன் மறைவு : வருந்தும் நடிகர்கள்

michael-jacksonமைக்கேல் ஜாக்சனின் மரணம்குறித்து தமிழ் நடிகர்கள் பலர் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
prabhu_devaபிரபுதேவா : ஜாக்சனின் தீவிரரசிகன் நான். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது நடனத்தை உன்னிப்பாக கவனித்து வந்தேன். அவரது ஒவ்வொரு அசைவுகளும் நம்மையும் ஆடவைக்கும். அத்தகைய திறமை சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் நம்பர் ஒன் ஜாக்சன்தான்.

lawranceலாரன்ஸ் : டான்ஸுக்கு மறு பெயர் மைக்கேல் ஜாக்சன். என்னைப் போன்ற நடன கலைஞர்கள் பலருக்கு அவர்தான் குரு. சிறுவயதில் அவர் ஆடிய நடனங்களை வீடியோவில் பார்த்து நடனம் கற்றிருக்கிறேன். இதற்கு முன்பும் சரி, பிறகும் சரி அவரைப்போல் ஒரு டான்ஸர் பிறந்ததுமில்லை, இனி பிறக்கபோவதுமில்லை. அவருக்கு நான் செலுத்தும் மரியாதையாக ஒரு படத்தில் அவரது பாணியில் ஒரு நடனம் ஆடி அஞ்சலி செலுத்துவேன்.

dhanushதனுஷ் : என் நடனங்கள மைக்கேல் ஜாக்சனின் ஸ்டைலை பின்பற்றியதுதான். புரூஸ்லியை எப்படி ஹீரோக்கள் முன்னுதாரணமாக கொண்டிருக்கிறார்களோ அதுபோல நடனத்தில் ஜாக்சனை முன்னுதாரணாமாக கொண்டிருக்கிறோம். ‘படிக்காதவன்’ ஷூட்டிங்கில் அவர் நடன அசைவுகள்போல் ஆட முயன்றேன். ஆனால் பக்கத்தில் கூட செல்லமுடியவில்லை. மற்றவர்களுக்கும் இதுதான் நிலை.

simbu சிம்பு : சிறுவனாக இருந்தது முதலே அவரது ரசிகன். டி.வி.முன்பாக அவரது இறுதி நிகழ்வுகளை பார்க்க உட்கார்ந்தவன் முடியும்வரை இடத்தைவிட்டு அசையவில்லை.

vikramவிக்ரம் : நடிகன் என்பதை தாண்டி, நான் மைகேல் ஜாக்சனின் ரசிகன், சிறு வயதிலேயே அவரது நடன அசைவுகாளைப் பின்பற்றி நடனமாட முயற்சித்திருக்கிறேன். ஜாக்சனின் பாடல், நடனத்தின் தாக்கம்தான் இப்போதும் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் இருக்கிறது. இன்னும் பல தலைமுறைக்கு அவரது தாக்கம் இருக்கும்.

sarathkumar                                                                                          raathaaravi

இதுகுறித்து சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி வெளியிட்ட செய்தியில், தமிழ் சினிமாவில் பல நடன நடிகர்கள், மைக்கேல் ஜாக்சனை பின்பற்றி புகழ் அடைந்தனர். ஜாக்சன் மறைவால் கலை உலகில் வெற்றிடம் உருவாகியுள்ளது. அவர் மறைவுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி செலுத்துகிறது’ என தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகச்சிறந்த இசை ஜாம்பவான் ஜாக்சன் – ஏ.ஆர். ரஹ்மான்

michael   மைக்கேல் ஜாக்சன் மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.    

   ar-rahman          இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்சனின் மறைவு என்னை மிகவும் பாதித்துள்ளது. உலகின் மிகச்சிறந்த இசை ஜாம்பவான் ஜாக்சன் இசை உலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஆஸ்கர் விருதுகளைப் பெறும் போது அவரைச் சந்தித்தேன். அப்போது இந்தியாவையும், இந்திய மக்களையும் பெரிதும் நேசிப்பதாக சொல்லி பெருமைபட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 27 other followers