முகப்பு > ALL POSTS, சினிமா > தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி கவலை

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி கவலை

3 திரைப்படத்தில் தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் நெருக்கமாக நடித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதனால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தில் மிகப்பெரிய சலசலப்பு உருவாகியுள்ளது.

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதா, இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது, உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள்.

நிலைமையை சரி செய்ய முடியுமா அல்லது நாங்கள் வேறு வழியில் இதை கையாள வேண்டுமா என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுகிறாராம் ரஜினி.

ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் வருத்தப்படவைக்கிறார் தனுஷ் என்று ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகவும், பிறகு தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் அவரை விட்டுப் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான நடிகை அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் மதுபான விருந்துக்கு சென்றுள்ளார் தனுஷ்.

தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நடிகைகளின் மதுபான விருந்துகளிலும் தவறாமல் கலந்து கொள்வாராம். இதைக் கேள்விப்பட்ட ரஜினி பயங்கர கோபத்துடன் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories: ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:
  1. 2:40 பிற்பகல் இல் ஜனவரி 7, 2012 | #1

    வாசிப்போம், அறிவோம், உலகம் பலவிதம். ஐஸ்வர்யாவின் மறுப்பு அறிக்கையும் வாசித்தேன்…நன்றி பிரபு..

    • 2:20 பிற்பகல் இல் ஜனவரி 11, 2012 | #2

      உலகில் மனிதர்கள் பலவிதம்.வாசிப்போம், அறிவோம்.நானும் ஸ்ருதிகாசனின் அந்த அறிக்கையை வாசித்தேன்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.