பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’

தாத்தா முதல் டாடா வரை ‘கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் ‘கொலவெறி’ தான்!

இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் … சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள்  இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் ‘கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள்.

‘என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 2.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள்.

4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. யாழ் நகரத்தின் வரவேற்பு வளைவு, நல்லூர் முருகன் கோயில், மரியாள் பேராலயம், யாழ்ப்பாணத்தின் மையத்தில் உள்ள தமிழ்ப் பெரியவர்களின் சிலைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, தாய் மண்ணைத் தரிசிக்க முடியாத புலம்பெயர் தமிழர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எஸ்.ஜெ.ஸ்டாலினிடம் பேசினோம்.

பாடல்…

”இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டிலேயே  ஸ்டுடியோ வைத்து, குறும்படங்கள், நாடகங்கள், வானொலி நிகழ்வுகளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து இசை அமைக்கிறோம். ‘தனுஷ்’ பாடல் மெட்டில், பலரும் பலவிதமாக பாடல்களை உருவாக்கி இணைய தளங்களில் வெளியிட்டதைப் பார்த்தோம். என்னுடைய நீண்டகால ஆதங்கத்தை கலந்து நாங்களும் ஒரு பாடல் செய்தோம். இந்தப் பாடல் காட்சிக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்புகளை என் நண்பர்கள் வர்ணன், அமலன் ஆகியோர் செய்தார்கள். ‘கொலவெறி – யாழ்ப்பாணம் வெர்ஷன்’ என்று பெயரிட்டு, ஈழத்தமிழர் பார்வையிடும் சமூக இணையதளங்களில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியிட்டோம். நீண்டகாலமாகவே தமிழ்க் கலைப் படைப்புகளில் தமிழ்மொழிக் கொலையும் வேற்றுமொழிக் கலப்பும் நீடிப்பது கண்டு மனதில் பெரும் ஆதங்கம் இருந்துவந்தது. வேற்றுமொழிக் கலப்புடன் வரும் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் தனித் தமிழில் மட்டுமே இயற்றப்படும் பாடல்களுக்கும் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை இந்தப் பாடலுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பின் மூலம் அறியமுடிகிறது” என்றார்.

தமிழுக்கு மரியாதை!

- ஜூனியர் விகடன்-

தமிழ்நாட்டில் உள்ள நாளிதழ்கள் ,சஞ்சிகைகள்,இணையதளங்கள் அனைத்தும் இப்பாடலை பாராட்டி எழுதியுள்ளன.இலங்கையின் அனைத்து தொலைக்காட்சி,வானொலிகளிலும் இப்பாடல் ஓயாது ஒளி,ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கின்றன.புலம் பெயர் நாடுகளும் இப்பாடல் பட்டயக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றது.

தொடர்புடைய சுட்டிகள் :

http://news.vikatan.com/index.php?nid=5972

http://www.vikatan.com/article.php?aid=14784&sid=415&mid=2&

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%27&artid=535458&SectionID=131&MainSectionID=131&SectionName=World&SEO=

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும்  பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான  சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

கதை சொல்லும் புகைப்படங்கள்

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி கவலை

3 திரைப்படத்தில் தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் நெருக்கமாக நடித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதனால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தில் மிகப்பெரிய சலசலப்பு உருவாகியுள்ளது.

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதா, இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது, உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள்.

நிலைமையை சரி செய்ய முடியுமா அல்லது நாங்கள் வேறு வழியில் இதை கையாள வேண்டுமா என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுகிறாராம் ரஜினி.

ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் வருத்தப்படவைக்கிறார் தனுஷ் என்று ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகவும், பிறகு தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் அவரை விட்டுப் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான நடிகை அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் மதுபான விருந்துக்கு சென்றுள்ளார் தனுஷ்.

தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நடிகைகளின் மதுபான விருந்துகளிலும் தவறாமல் கலந்து கொள்வாராம். இதைக் கேள்விப்பட்ட ரஜினி பயங்கர கோபத்துடன் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories: ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:

கொட்டாவி

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.

ஒருவருடன் நாங்கள் உரையாடும் போது அந்த நபர் கொட்டாவி விட்டால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று நினைப்போம்.அவர் எங்களை அலட்சியப்படுத்துகிறார்  என்று எங்களுக்குள் எண்ணிக் கொள்வோம்.

ஆனால் உண்மை அதுவல்ல.அவர் எங்கள் பேச்சை உன்னிப்பாக அவதானிக்கிறார் என்பதே அர்த்தம்.எனவே இனி யாராவது கொட்டாவி விட்டால் மகிழ்ச்சியடையுங்கள்.

புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories: ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

தமிழ் ரசிகர்களை கொச்சைப் படுத்திய நடிகன் கார்த்தி

Categories: சினிமா, ALL POSTS குறிச்சொற்கள்:

SMSக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா?

S- சிங்கம் அனுப்ப

M- மங்கி  படிக்கும்

S- சிமோள் ஸ்டோரி

என்ன முறைப்பு!நான் சிங்கம்.நீங்கள் மங்கி.யாருக்காவது அனுப்பி நீங்களும் சிங்கமாயிடுங்க. —————————————————————————————————————————————–

குறிப்பு:  SMS என்பதன்  உண்மையான தமிழ் அர்த்தம் குறுஞ்செய்தி
அல்லது குறுந்தகவல்.

=============================================================================

 உபரித் தகவல்- இது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வெள்ளைச் சிங்கம்.
Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

எந்த மொழியையும் இலகுவாக கற்றுக்கொள்வதற்கு

புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால் போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம்.

ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.

இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில் வல்லவர்களாகி விடலாம், கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை, இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது.

இணையதள முகவரி

http://verbling.com/

 

Categories: ALL POSTS, ஊடகம் குறிச்சொற்கள்:

பாலு மகேந்திராவின் புதுப்படம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளரான பாலு மகேந்திரா புதுப்படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக மதிக்கப்படும் பாலு மகேந்திராவுக்கு சிறப்பு செய்ய பாலு மகேந்திரா ஹிட்ஸ்(Balu Mahendra Hits) என்ற நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் திரையுலகத்தினர் நடத்தியுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய கவிஞர் அறிவுமதி, இயக்குனர் சீனு ராமசாமி, படித்துறை பட இயக்குனர் சுகா, கவிஞர் நா.முத்துக்குமார் மற்றும் ஆடுகளம் பட நடிகர் ஜெயபாலன், பானு சந்தர் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டு மழையில் மூழ்கடித்து நெகிழ வைத்துள்ளார்கள்.

இந்த விழா குறித்து கவிஞர் அறிவுமதி கூறுகையில், பல்லவி அனு பல்லவி படத்தின் மூலம் எங்கள் இயக்குனர் பாலு மகேந்திராவிடம், மணிரத்னம் திரையுலக பாடம் பயின்றார். இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவியாளர் என்று மணிரத்னம் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

திரையுலக பிரபலங்களின் பாராட்டை ஏற்று பேசிய பாலு மகேந்திரா திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நான், என் நண்பர் ஒருவர் தந்த உற்சாகத்தில் படத்தை இயக்கி இயக்குனர் ஆனேன். தற்பொழுது புதுப்படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளேன் என்றார்.

பாலு மகேந்திரா இலங்கையின் மட்டக்களப்பு அமிர்தகளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories: சினிமா, ALL POSTS குறிச்சொற்கள்:

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” இதன் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்.நீங்கள் நினைப்பீர்கள் அயல் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உங்கள் பிள்ளை தானாக வளரும் என்று.அது தான் தவறு.
இதன் அர்த்தம் என்னவென்றால் “உங்கள் மனைவியை ஊட்டி வளர்த்தால் உங்கள் மனைவியின் வயிற்றில் வளரும் உங்களது பிள்ளை தானாக வளரும்” என்பதாகும்.உங்கள் மனைவி ஊரான் பிள்ளை அல்லவா!

 

நகைச் சுவையாக எடுத்துக்கொள்ளவும்.

 

Categories: ALL POSTS, நகைச்சுவை குறிச்சொற்கள்:

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.

தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல்: இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

ரத்த சோகை: பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

தேநீர்: கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் ரீ போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.

நீரிழிவு நோய்: 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

உடலில் நீர், உப்பு பற்றாகுறை: போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடித்து வர வேண்டும்.

 

Follow

Get every new post delivered to your Inbox.