4
நவ
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:ஜாக்கிசான். கருத்துத் தெரிவிக்கவும்

‘வானத்தை போல’, ‘தசவதாரம்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அடுத்து இந்திப் படத்தைத் தயாரிக்க பாலிவுட் போவார் என்று நாம் நினைத்தால் மனிதர் ஹாலிவுட்க்கு ஃபிளைட் பிடித்து விட்டார். இவர் தயாரிப்பில் ஆங்கிலப் படம் ஒன்று உருவாக்கவிருக்கிறது. 200 கோடி ரூபாயில் இந்த படம் தயாராகும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் ஜாக்கிசான். தமிழிலேயே ரூ100 கோடி ரூ150 கோடியில் பல படங்கள் வந்து கொண்டிருக்க ஆங்கிலத்தில் 200 கோடியில் தயாரிப்பது ஆச்சரியம் தருகிறது… ஒருவேளை தமிழில் வெளிவரும் பட்ஜெட் படங்கள் போன்று இந்தப் படமும் ஆங்கிலத்தில் பட்ஜெட் படமாக இருக்கலாம்…
ஜாக்கிசானுக்கு யார் ஜோடி… மல்லிகா ஷெராவத்தாக இருக்குமோ…?
2
நவ
கீழ் ALL POSTS பதிபவர் pirabuwin 2 மறுமொழிகள்
29
அக்
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin கருத்துத் தெரிவிக்கவும்
பொங்கலுக்கு எப்படியும் அசல் படத்தை கொண்டு வருவது என்பதில் படத்தின் இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பும் உறுதியாக இருக்கிறது. சமீரா ரெட்டி, பாவனா என்று இரண்டு ஹீரோயின்கள், சம்பத், சுரேஷ் என இரண்டு வில்லன்கள் என டபுள் ஸ்ட்ராங்காக உருவாகி வருகிறது அசல்.
பாரிஸில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்கள் முன்புதான் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் என இன்னும் 20 சதவீத படம் பாக்கியிருக்கிறது.
இதுவரை எடுத்ததை போட்டுப் பார்த்ததில் அனைவருக்கும் திருப்தி. போஸ்ட் புரொடக்சன் வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடித்து டிசம்பரில் ஆடியோவை வெளியிட வேண்டும் என்பது திட்டம்.
இந்தப் பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு தல பொங்கல்.
27
அக்
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:ஆசின். கருத்துத் தெரிவிக்கவும்
தனது பிறந்த நாளையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைத்து கலக்குகிறார் ஆசின். மலையாளத்திலிருந்து கிளம்பி தெலுங்கு , தமிழ் என தேட்டையைப் போட்ட நடிகை ஆசின் இப்போது இந்தியில் குடியேறியுள்ளார். தனது சாமர்த்தியத்தால் முதலில் அமீர்கான், பிறகு சல்மான் கான், அடுத்து அபிஷேக் பச்சன் என விஐபி நடிகர்களோடு வெள்ளித் திரையில் விளையாடி வருகிறார்.
இன்று ஆசினுக்கு 25வது பிறந்த நாள். இதை சிறப்பாக கொண்டாடுகிறார் ஆசின். பாலிவுட்டுக்கு வந்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் தடபுடலாக இருக்கிறாராம் ஆசின்.
நேற்று முதலே ஆசின் தனது பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்து விட்டார். இன்று பாலிவுட்டின் பிரபலங்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனராம்.
இன்று பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைக்கவுள்ளாராம்.
ஏணியாக இருந்து ஏற்றி விட்ட தமிழ்த் திரையுலகினருக்கு இந்த பார்ட்டியில் இடம் இல்லை என்று தெரிகிறது.
தற்போது அசுதோஷ் கோவரிகரின் புதிய படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஆசின். இப்படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்தான் அபிஷேக்கின் ஜோடியாக நடிக்கவிருந்தார். ஆனால் டேட்ஸ் இல்லாததால் ஆசின் வந்து விட்டார்.
மும்பையிலிருந்து காற்று வாக்கில் வந்த ஒரு செய்தி … அசின் மீது வியர்வை நாற்றம் ஓவராக இருக்கிறதாம். என்ன சென்ட் போட்டாலும் வேலைக்காகவில்லையாம். வெற்றிகரமான நடிகை என்ற முத்திரை விழுந்து விட்டதால் இவரைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் நல்ல பெர்ப்யூம் போட்டுக் கொண்டு வந்து பெர்பார்ம் பண்ணுங்க என்று ஹீரோக்கள் ரெக்கமன்டேஷன் செய்துள்ளனராம்.
20
அக்
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:ஐங்கரன். கருத்துத் தெரிவிக்கவும்
தொடர்ந்து பல அட்டர் பிளாப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஐங்கரனுக்கு அத்திப் பூத்தார் போல் ‘பேராண்மை’ அமைந்திருக்கிறது.
ஐங்கரன் நிறுவனம் தமிழில் படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து தோல்வி மேல் தோல்வி தான் தொடர்ந்தது. பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘குசேலன்’ வாரிக் கொண்டு போய்விட… அடுத்து தயாரித்து வந்த ‘எந்திரன்’ செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனம் சன் பிக்சர்ஸிடம் அந்தப் படத்தை கை மாற்றியது. இது இப்படி இருக்க, ஐங்கரன் தயாரித்து தீபாவளியில் வெளிவந்த ‘பேராண்மை’க்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இனிமே தப்பிச்சிக்கலாம்… என்கிற புது நம்பிக்கை இப்போது ஐங்கரனுக்கு கிடைத்துள்ளது. அடுத்து அவர்கள் தயாரிப்பில் இருக்கும் ‘அங்காடித் தெரு’ படத்தை இயக்குவது வசந்தபாலன் என்பதால் இந்தப் படமும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் புது தெம்புடன் இருக்கிறது ஐங்கரன்.
இனியாவது… சொதப்பலான படங்களை எடுக்காம இருந்தா சரி…
20
அக்
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:ஆதவன், சூர்யா. கருத்துத் தெரிவிக்கவும்

சமீபகாலமாக தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து வந்த சூர்யாவுக்கு ‘ஆதவன்’ முந்தைய படங்களுக்கு ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் போது சற்றே உதறல் அடிக்கிறது.
‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொர்ந்து வித்தியாசமான கதை களங்களை சூர்யாவிடம் எதிர்பார்த்த போது ‘அயன்’ வந்தது. பழைய கதைதான் என்றாலும் வேகமான திரைக்கதையால் படம் ஹிட்டானது. ஆனால் ‘ஆதவன்’ முற்றிலும் எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறது. ஏற்கனவே பல தடவைகள் தாறுமாறாக அரைக்கப்பட்ட கதை இப்போது ‘ஆதவன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர்களில் பலரும் ‘வெத்துப் படம் இது’ என்று சொல்கிற அளவுக்கு புலம்ப வைத்த இந்த படம் முழுக்க முழுக்க சூர்யாவுக்கு சம்பந்தமில்லாத கதையைக் கொண்டு உள்ளது. ஒருவேளை சூர்யா அறிமுகமான புதிதில் இந்தப் படம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
13
அக்
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:அனுஷ்கா, கோவில். 2 மறுமொழிகள்
சினிமாக்காரர்களுக்கு கோவில் கட்டும் கொடுமையை இன்னும் ரசிகர்கள் கைவிடவில்லை போலும். இப்போது நடிகை அனுஷ்காவுக்கு கோவில் கட்டக் கிளம்பியுள்ளது ஒரு குரூப்.
முன்பு குஷ்புவுக்குக் கோவில் கட்டினார்கள். ஆனால் அவர் தமிழக பெண்களின் கற்பு குறித்து தனது வாய் முத்துக்களை உதிர்த்ததும், அவரது வீட்டுக்கு முன்பு துடைப்பம், செருப்புகளுடன் திரண்டார்கள். பெரும் போராட்டங்களும் வெடித்தது.
பின்னர் சமீபத்தில் நமீதா வுக்கும் கோவில் கட்ட ஒரு குரூப் கிளம்பியது. ஆனால் இப்போது கோவில் கட்டுவார்கள், பின்னர் வேறு மாதிரியாக கவனிப்பார்கள் என்று பயந்த நமீதா, அந்த முயற்சிக்குத் தடை போட்டு விட்டார்.
இந் நிலையில் இப்போது அனுஷ்காவுக்குக் கோவில் கட்ட சென்னையைச் சேர்ந்த சிலர் துடித்து வருகிறார்களாம். தெலுங்கில் முன்னணியில் இருக்கும் அனுஷ்கா இப்போது அருந்ததி படம் மூலம் தமிழில் பிரபலமாகி விட்டார். வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதில் அவரது கவர்ச்சிகரமான ஸ்டில்களைப் பார்த்த சிலர் கோவில் கட்ட கிளம்பியுள்ளனர். இதற்காக சட்டுப்புட்டென்று ஒருசங்கத்தை ஆரம்பித்து, அனுஷ்காவை அணுகி கோவில் கட்ட பெர்மிஷன் கேட்டுள்ளனர்.
ஆனால் அனுஷ்கா அதெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் கோவில் கட்டத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.
9
அக்
கீழ் ALL POSTS, சினிமா பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:விஜய். 1 மறுமொழி

வில்லன் பவர்ஃபுல்லாக இருந்தால் மட்டுமே ஹீரோயிசம் தூக்கலாகத் தெரியும். எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜுக்கு மறைமுக காரணம் நம்பியாரின் வில்லத்தனம் என்றால் மறுக்க முடியுமா?
ஒரு படத்தின் வில்லனை முடிவு செய்தாலே பாதி வேலை முடிந்த மாதிரி.
அந்தவகையில் சுறாவில் விஜய்யின் வில்லன் யார் என்பதை முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.
சமீபத்தில் ஆந்திராவை கலக்கிய படம், ராம் சரண் தேஜா நடித்த மஹாதீரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர், தேவ் கில். இவரை சுறாவில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவரே சுறாவில் மெயின் வில்லன், விஜய்யுடன் மோதப் போகிறவர்.
கேரளாவின் ஆலப்புழையில் முதல் ஷெட்யூலை முடித்தவர்கள் இரண்டாவது ஷெட்யூலுக்காக சென்னை வந்துள்ளனர். பின்னி மில்லில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறலாம் என்பது யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் செய்தி.
6
அக்
கீழ் ALL POSTS, வித்தியாசம் பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:KFC. கருத்துத் தெரிவிக்கவும்
2
அக்
கீழ் ALL POSTS, கிரிக்கெட், புகைப்படங்கள் பதிபவர் pirabuwin குறியிடப்பட்டது:கிரிக்கெட் வீரர்கள், மனைவிகள். 5 மறுமொழிகள்
Ponting

kellie Hayden

Madhimalar Muralidharan

Anjali Tendulkar

Vijeta

Andrea Hewitt Kambli

Huma Wasim

Vasana

Mel Gilchrist

Aarti

Dona

Sailaja

Tenielle

Kim

Lynette

Jane

Cristina Jayawardane

Yehali Sangakkara

Jessica

Rachelle

கருத்துக்கள்